வாடகைக்கு குடியிருந்த வீட்டை சட்டவிரோதமாக உள்வாடகைக்கு விட்ட ஆடவருக்கு 25 நாட்கள் சிறை!

illegal betting activities investigation
(Rep. Image)

தான் குடியிருந்த வாடகை வீட்டைப் பலபேருக்கு சட்டவிரோதமாக உள்வாடகைக்கு விட்டதால் ஆடவர் ஒருவருக்கு, அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தின்கீழ் 25 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

வீடமைப்பு வளர்ச்சிக்கழக (வீவக) அதிகாரிகளால் திடீர் என நடத்தப்பட்ட சோதனைகளில், கிட்டதட்ட 2 முறை சிக்காமல் தப்பித்திருக்கிறார்.

இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வந்த பாலாஜி, ஆதில் என்ற இரண்டு அரிய இளம் ஒட்டகச்சிவிங்கிகள்!

அச்சோதனைகள் குறித்து தம் நண்பராக இருந்த வீவக அமலாக்க அதிகாரி ஒருவர் அவருக்கு முன்கூட்டியே தகவல் அளித்ததே அதற்கும் காரணம்.

ஆனால், தற்போது இக்குற்றம் நிரூபிக்கப்பட்டதிற்கு, இந்தியாவைச் சேர்ந்த தமன்தீப் சிங் (வயது 23), தான் குடியிருந்த வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

2017ல் வீடமைப்பு வளர்ச்சிக்கழக அமலாக்க அதிகாரியாக இருந்த கலையரசன் கருப்பையா (வயது 55), தமன்தீப் குடியிருந்த வீட்டை சோதனை செய்த சமயத்தில், இருவரும் நன்றாக பழகி நல்ல நண்பர்களாகிவிட்டனர்.

பிறகு வேறொரு வாடகை வீட்டிற்குக் குடிபெயர்ந்த தமன்தீப், அந்த வாடகை வீட்டை சட்டவிரோதமாக மற்றவர்களுக்கு உள்வாடகைக்கு விட்டிருந்தார்.

ஒரே சமயத்தில் அந்த வாடகை வீட்டில் 12 முதல் 13 பேர் வரை வசித்து வந்தனர். ஒவ்வொருவருக்கும் மாதவாடகையாக ஏறக்குறைய தலா $200 வசூலிக்கப்பட்டது.

அந்த வாடகை வீட்டில் இருந்த அளவுக்கு அதிகமான கூட்டம் மற்றும் ஏற்பட்ட இரைச்சல் ஆகியவை குறித்து வீவகவுக்கு புகார் வந்துள்ளது. அப்போது அதிகாரி கலையரசன் நட்பின் காரணமாக, தமன்தீப் பிரச்சினையிலிருந்து தப்பிச்செல்வதற்கு உதவி செய்தார்.

கலையரசன், தமன்தீப்பிற்கு உதவி வந்தது குறித்து கடந்த ஆண்டு ஜனவரியில் லஞ்ச, ஊழல் புலனாய்வுத் துறைக்குத் தகவல் கிடைத்தது.

இதனால் வீடமைப்பு வளர்ச்சிக்கழக அமலாக்க அதிகாரி கலையரசனுக்கு கடந்த மாதம் 25 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

பயணத் தடைகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகளை அகற்ற மலேசியா பரிசீலனை