உடலுறவுக்கு மறுப்பு தெரிவித்த மனைவியை தாக்கிய கணவர் – 2 வாரம் சிறை.!

Pic: File/Try Sutrisno Foo

சிங்கப்பூரில் கடந்த 2017ம் ஆண்டில் கெல்வின் கொக் சொங் மெங்க் (Calvin Kok Chong Meng) என்பவருக்கு எதிராக அவரின் மனைவி பாதுகாப்பு உத்தரவு பெற்றிருந்தார்.

இந்நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதம் கெல்வின் கொக் மது அருந்திவிட்டு இரவு வீடு திரும்பிய பின்னர், மனைவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

மோசடி அழைப்புகள்… இந்திய தூதரகம் எச்சரிக்கை!

உடலுறவுக்கு மறுப்புத் தெரிவித்த மனைவியை படுக்கையில் வைத்து கணவர் அடித்துக் காயப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மனைவி, சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

உடலுறவுக்கு மறுப்பு தெரிவித்த மனைவியை தாக்கிய கெல்வின் கொக் சொங் மெங்க் என்ற 32 வயது ஆடவருக்கு இரண்டு வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்தபோது மனைவியிடம் கணவருக்கு எதிராகத் தனிநபர் பாதுகாப்பு உத்தரவு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தனிநபர் பாதுகாப்பு உத்தரவை மீறியதற்காக ஆறு மாத காலம் வரை சிறைத்தண்டனை, S$2,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் மதுபானம் திருடிய ஆடவர் கைது; 204 மதுபாட்டில்கள் பறிமுதல்.!