தன் உடல் எடை குறித்து வருந்திய ஆடவர் ஒருவர் சுமார் 50 கிலோ எடையைக் குறைத்துள்ளார்.
உடல் எடை தன்னை கவலையடையச் செய்ததாகவும், தனது குடும்பத்தினருடன் கோபத்தை ஏற்படுத்தியதாகவும் அந்த ஆடவர் கூறியுள்ளார்.
உட்லண்ட்ஸில் பேருந்தில் சென்ற பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட நபர் கைது
இதனால் தாம் அறுவை சிகிச்சைக்கு செய்து சுமார் 50 கிலோ எடையைக் குறைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்து சஞ்சீவ் என்ற அவர் 50 கிலோ எடையை குறைத்ததாக ஸ்டாம்பிடம் கூறியுள்ளார்.
முன்னதாக, இந்த எடை காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளுடன் அவருக்கு பிரச்சினை ஏற்பட்டதாகவும், முக்கியமாக இந்த கவலை என்னை சட்டென்று கோபப்பட வைக்க முக்கிய காரணமாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை வயிற்றின் செயல்திறனைக் குறைக்கிறது, இதன் காரணமாக நாம் உக்கொள்ளும் கலோரி குறைகிறது.
1.65 மீ உயரமுள்ள அவர், சுமார் 120 கிலோ எடையுடன் இருந்தார் என்றும் தற்போது எடையை குறைத்து மகிழ்வுடன் வாழ்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் அதிகம் மோசடி செய்யப்படும் வெளிநாட்டு ஊழியர்கள் – மோசடி எண்ணிக்கை அதிகரிப்பதாக தகவல்