பல மாதங்களாக 38 வயதுப் பெண்ணை பின்தொடர்ந்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக 56 வயதான சிங்கப்பூர் ஆடவர் தியா சின் குவாங் என்பவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டத்திற்குப் புறம்பாக பின்தொடர்ந்ததாக இரண்டாவது குற்றச்சாட்டும் பரிசீலிக்கப்பட்டுள்ளதாக CNA தெரிவித்துள்ளது.
தேடப்பட்டு வந்த ஊழியர்… சென்னை விமான நிலையத்தில் வைத்து தூக்கிய போலீஸ்!
தியாவும் பாதிக்கப்பட்ட பெண்ணும் ஒரே கட்டிடத்தில் வேலை செய்து, அதே பகுதியில் வசித்து வந்தனர் என்பது கூடுதல் தகவல்.
பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை லிப்டில் வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தியா மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது போன்ற பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
சிங்கப்பூர் வரும் சர்வதேச பயணிகளுக்காக பாதுகாப்பு பயண வழிகாட்டி அறிமுகம்