பண்ணை விலங்குகளுடன் குழந்தைகள் சம்மந்தப்பட்ட தவறான காணொளி உள்ளிட்ட ஆபாசத்தை வாட்ஸ்அப்பில் பகிர்ந்த குற்றத்தை வெளிநாட்டு ஊழியர் ஒப்புக்கொண்டார்.
திருமணமாகி மூன்று வயதுக் குழந்தையை உடைய 30 வயதான ஹிந்தகும்புரே சரிந்து தில்ஷான் ராஜபக்ஷ என்ற இலங்கை நாட்டவர் இதில் சிக்கினார்.
சிறுவர் தொடர்புடைய பாலியல் ரீதியான 17 காணொளிகளை தனிப்பட்ட முறையில் சுமார் 11 தடவைகள் வாட்ஸ்அப் வழி பகிர்ந்துள்ளார் அவர்.
சிறுவர் துஷ்பிரயோகப் காணொளிகளை அனுப்பியது உள்ளிட்ட குற்றங்களை ஹிந்தகும்புரே வியாழன் அன்று ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு இலங்கையர், அப்போது 25 வயதான கொலம்பகே தனுஷ்க சாமர பெரேரா என்பவருக்கு, கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஹிந்தகும்புரே மற்றும் அவரது ஆறு அறை தோழர்கள் வாட்ஸ்அப்பில் ஒரு குழுவை உருவாக்கி, இந்த தவறான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் ஹிந்தகும்புரேவுக்கு மார்ச் 24ஆம் தேதி தண்டனை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.