OnlyFans ஆன்லைன் தளம் மூலம் ஆபாசமான படங்களை பரப்பியதாக 22 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை இன்று (டிசம்பர் 29) தெரிவித்துள்ளது.
அந்த நபர் OnlyFans தளத்தில், தனது அந்தரங்க உறுப்புகளின் படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியதாக காவல்துறைக்கு செப்டம்பர் 4ஆம் தேதி தேதி புகார் கிடைத்தது என்று காவல்துறை செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து, கடந்த அக்டோபர் 11 அன்று அந்த இணைய கணக்கை போலீஸார் கைப்பற்றினர்.
மேலும், அந்த ஆடவருக்கு கணக்கை பயன்படுத்தவும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இருப்பினும், அந்த ஆடவர் தனது கணக்கின் கடவுச்சொல் மாற்றி மீண்டும் அதனை பயன்படுத்தி ஆபாசப் படங்களைப் பதிவேற்றினார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
அந்த ஆடவர் மீது நாளை வியாழக்கிழமை (டிச. 30) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
சிங்கப்பூரில் இருந்து திரும்பியவர் குறித்து பொய்யான தகவல் அளித்த நபர்கள் – எச்சரித்த போலீசார்