சிங்கப்பூர் மருத்துவமனை வார்டில் வன்முறையில் ஈடுபட்ட 43 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட சந்தேகத்தில் அவர் மீது குற்றம் சாட்டப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
உதவி தேவையுடையோருக்கு உதவ 24 மணி நேர வாட்ஸ்அப் சேவை!
நேற்று செப். 9, 2022 அன்று இரவு சுமார் 9:20 மணியளவில் இது தொடர்பாக உதவி வேண்டி அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மருத்துவமனை வார்டில் உள்ள செவிலியர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை அவர் குத்தியதாகவும், அநாகரீகமான வார்த்தைகளால் ஏசியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் மீது இன்று (செப்.10) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
வெளிநாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்த தடை – நிறுவங்களுக்கு இனி கடும் நடவடிக்கை தான்: MOM அதிரடி