வெளிநாட்டு பணிப்பெண்ணை பல முறை நாசம் செய்த வேலை இல்லா ஆடவர்: 24 ஆண்டுகள் சிறை, 24 பிரம்படி

migrant-domestic-workers mental-distress
(Photo: TRT World and Agencies)

வீட்டுப் பணிப்பெண்ணை, 34 வயதுடைய வேலை இல்லா ஆடவர் தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்த செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு மாதத்தில், தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் வீட்டில் இல்லாத போது அவர் பலமுறை பணிப்பெண்ணை கற்பழித்துள்ளார்.

அப்போது 24 வயதான இந்தோனேசியப் பெண், ஆரம்பத்தில் இதனை சகித்துக்கொண்டு வாழ்ந்து வந்தார். ஆனால் இறுதியில் கண்ணீருடன் ஃப்ளாட்டை விட்டு வெளியே ஓடி வந்து நடந்த சம்பவங்களை தனது முகவரிடம் எடுத்து கூறினார்.

சென்னை விமான நிலையம் வந்த பயணிகளுக்கு துணிப்பை

அதன் பின்னர் அவர் போலீசிடம் புகாரை பதிவு செய்து, இதனால் அவர் சிங்கப்பூரில் வேலை செய்வதில் பாதிப்பு ஏற்படாது என்றும் உறுதியளித்தார்.

2020ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் இடையில் இந்த பலாத்காரம் நடந்தது. இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

மனைவி பாலியல் உறவில் தன்னை திருப்திப்படுத்தவில்லை என்றும் அந்த ஆடவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் நேற்று புதன்கிழமையன்று, அந்த நபருக்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 24 பிரம்படியும் விதிக்கப்பட்டன.

சிங்கப்பூர் தீயணைப்பு படையில் புதிய மீட்பு வாகனம் – 90மீ வரை நீளும்… நிமிடத்துக்கு 3,800லி தண்ணீரை பீச்சியடிக்கும்!