கிளார்க் கீ ஹோட்டல் அறையில் உள்ள பால்கனி விளிம்பில் ஆடவர் ஒருவர் ஆபத்தான முறையில் அமர்ந்து, வெளியே எச்சில் துப்பியதாக புகார் எழுந்துள்ளது.
பொதுவாக சிங்கப்பூர் ஹோட்டல் அறைக்கு வரும் நபர்கள் இவ்வாறு நடந்துகொள்ள மாட்டார்கள் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.
ஆனால், ஹோட்டல் Paradox Singapore Merchant Courtல் ஆடவர் ஒருவர் தனது நண்பர்களுடன் தங்கியிருந்தபோது அது அனைத்தையும் மீறியுள்ளார்.
அவர் ஹோட்டல் பால்கனியின் விளிம்பில் அமர்ந்திருப்பது மட்டுமல்லாமல், கட்டிடத்தின் கீழே எச்சில் துப்புவதும் கேமராவில் சிக்கியது.
வெளியான வீடியோவில், அந்த ஆடவர் விளிம்பில் அமர்ந்து கைபேசியில் பேசுவதையும், பின்னர் கீழே எச்சில் துப்புவதையும், அதோடு மட்டுமல்லாமல் அவர் கையில் சிகரெட் இருப்பதையும் காணலாம்.
இதுபற்றி ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
மறுதொற்று காரணமாக சிங்கப்பூரில் இந்த ஆண்டு இறுதியில் அடுத்த அலை ஏற்படக்கூடும்!