சிறுமியை ஆன்லைனில் வாங்கி, பாலியல் அடிமையாகப் பயன்படுத்த முயன்ற வெளிநாட்டவருக்கு சிறை

Photo: Getty

மூன்று வயது சிறுமியை ஆன்லைனில் வாங்க முயன்ற 37 வயதான வெளிநாட்டு நபருக்கு புதன்கிழமை (டிச. 7) சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் வாங்கி சிறுமியை பாலியல் அடிமையாகப் பயன்படுத்த திட்டமிட்டதாக நியூசிலாந்து சேர்ந்த அவர் பிடிபட்டார்.

நெருங்கும் ஆண்டு இறுதி.. எச்சரிக்கை விடுக்கும் சிங்கப்பூர்

ஆரோன் ஜோசப் ஹட்டன் என்ற அவருக்கு முன்னர் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என்று தி நியூசிலாந்து ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், 18 வயதுக்குட்பட்ட ஒருவரை பாலியல் செயலுக்காக ஒப்பந்தம் செய்ய முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், குழந்தைகள் பாலியல் அத்துமீறல் தொடர்பான 417 ஆபாச படங்களை வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சிங்கப்பூரில் பணிபுரியும் இந்திய ஊழியர்களின் சாதனை: 100 பில்லியன் டாலர் ஹிட்!