யிஷுனில் இருவருக்கு கத்தி குத்து – ஒருவர் கைது

knife slash

58 வயது சிங்கபூரர் ஒருவர் கத்தியால் இருவரைத் தாக்கியதாக சிங்கப்பூர் இன்சிடென்ட்ஸ் (Singapore Incidents) இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட வீடியோவில் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் ஜூன் 23, வியாழன் இரவு Yishun இல் நிகழ்ந்துள்ளது. அந்த வீடியோவில் ஒரு ஆம்புலன்சும் காணப்பட்டது, போலீஸ் சைரன் சத்தமும் ஒலித்தது. மேலும் அந்த வீடியோவில் இரத்தக் கறைகள் தரையெங்கும் காணப்பட்டன.

 

வியாழன் இரவு 8:30 மணியளவில் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர். இதில் 62 வயதுடைய ஆண் ஒருவரும், 41 வயதான பெண் ஒருவரும் ஆவர். பின்னர் அவர்கள் இருவரையும்  Khoo Teck Puat மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

 

இருவரை தாக்கிய அந்த நபர், அபாயகரமான தாக்குதல் மற்றும்  போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டார்.

 

இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்றும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.