கடும் வாக்குவாதம்.. மகனை கத்தியால் தாக்கிய தந்தை கைது

Man slashes son kitchen knife
Stomp

செராங்கூன் நார்த் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஜனவரி 8 அன்று ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின் போது 62 வயது தந்தை தனது மகனை கத்தியால் வெட்டியுள்ளார்.

அன்றைய தினம் பிற்பகல் 1.35 மணியளவில் பிளாக் 546 செராங்கூன் நார்த் அவென்யூ 3இல் தகராறு தொடர்பான வழக்கு குறித்து தகவல் கிடைத்ததாக ஏசியாஒன்-னிடம் போலீசார் தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் பயணிகளுக்கான சோதனை முறை கடுமை: VTL விமான பயணிகளுக்கும் கடும் சோதனை

அதனை அடுத்து தந்தையை போலீசார் கைது செய்தனர். அவரின் 25 வயது மகன் மற்றும் 61 வயது பெண்ணும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தனர்.

நேற்று திங்கட்கிழமை (ஜனவரி 10), சந்தேகத்திற்கு இடமான முறையில் தானாக முன்வந்து மகனை காயப்படுத்தியதாக நீதிமன்றத்தில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சமையலறைக் கத்தியால், அவர் தனது மகனின் கைகள், தொடைகள் மற்றும் மார்பில் சில முறை வெட்டியது நீதிமன்ற ஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

அவர் தற்போது உட்லண்ட்ஸ் காவல் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார், மேலும் அவருக்கு S$15,000 பெயில் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரது விசாரணை வரும் ஜனவரி 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேடப்பட்டு வந்த தமிழக ஊழியர்… சிங்கப்பூரில் இருந்து வந்தவரை வளைத்து பிடித்த போலீசார்