சிலோசோ கடற்கரையில் பெண்களை தவறாக ரகசிய படம் எடுத்து சிக்கிய ஆடவர்.. கொந்தளித்த பெண்கள்!

சிலோசோ கடற்கரையில் இருந்த இரண்டு பெண்களை ரகசியமாக புகைப்படம் எடுத்த ஆடவர் ஒருவர் சிக்கினார்.

இதையடுத்து, ரகசியமாக புகைப்படம் எடுத்த அந்த ஆணுடன் நடந்த சலலப்பை, பெண் ஒருவர் பதிவு செய்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

“அழகு சாதனப் பொருள்” என கடத்தப்படவிருந்த போதைப்பொருள் – சோதனையில் சிக்கிய 24 வயது பெண்

அந்த இரண்டு பெண்களும் சகோதரிகள் எனவும் கூறப்பட்டுள்ளது.

பெண்கள் பொருட்களை எடுத்துக்கொண்டிருக்கும்போது ஆடவர் தனது கைபேசி கேமராவை அவர்களை நோக்கிச் வைத்து புகைப்படங்களை எடுத்ததை பார்த்தாக பெண் விளக்கினார்.

அதனை அடுத்து, அந்த பெண்கள் ஆடவரிடம் சென்று இதுபற்றி கேட்க, முதலில் தான் செய்ததை அவர் மறுத்துள்ளார்.

ஆனால், பெண்கள் இருவரும் சோதனை செய்ததில் ஆடவரின் கைபேசியில் எட்டு முதல் ஒன்பது புகைபடங்களைக் கண்டுபிடித்ததாக கூறினர்.

அந்த ஆணுடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் மூன்று வீடியோக்களும் அதில் இணைக்கப்பட்டுள்ளன.

எதிர்ப்பு பலமானதை உணர்ந்த ஆடவர், மன்னிப்பு கோரி ஸ்கிரீன் ஷாட்களை பதிவேற்றினார், அது அந்த பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் வழியாக அனுப்பப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

மாண்டாய் அவென்யூவில் கொழுந்து விட்டெரிந்த பைக்… தீக்கிரையாய் போன வாகனம் – மருத்துவமனையில் ஓட்டுநர்