நண்பர்களை வைத்து பாலியல் பலாத்காரம் செய்வேன் என்று கத்தியை கொண்டு மிரட்டிய கணவர் கைது

Google Maps/Unsplash (for illustrative purposes only).

சிங்கப்பூரில் 31 வயதான ஆடவர் ஒருவர், தன் நண்பர்கள் பாலியல் பலாத்காரம் செய்வார்கள் என்று கணவரே கத்தியைக் காட்டி மனைவியை மிரட்டியுள்ளார்.

அதனை அடுத்து அவர் கடந்த அக்டோபர் 24ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டார்.

தன்னை வைத்து பூட்டிக்கொண்டு பதற்றத்தை ஏற்படுத்திய பெண்… வீட்டை உடைத்து கைது செய்த அதிகாரிகள்

கடந்த ஆண்டு அக்டோபர் 17, அன்று பிற்பகல் 1:50 மணியளவில் பிளாக் 102 அல்ஜுனிட் கிரசெண்டில் உதவி வேண்டி காவல்துறைக்கு அழைப்பு வந்தது.

அதில் அழைத்தவர் தனது கணவர் கத்தியை காட்டி மிரட்டியதாக காவல்துறையிடம் புகார் கூறினார்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம், பெடோக் காவல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் ஒரு வாரம் கழித்து, அந்த நபரை கைது செய்தனர்.

விசாரணையில் அந்த நபர் தனது மனைவியுடன் தகராறு செய்ததாகவும், பின்னர் அவர் தலையில் ஷாம்பூவை ஊற்றியதாகவும், அது அவள் கண்களில் பட்டதாகவும் தெரியவந்தது.

மேலும், அவர் தன் மனைவியை துண்டால் அடித்தார் என்றும், ஆடைகளை கிழித்தார் என்றும் கூறப்படுகிறது.

பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்வதாக அச்சுறுத்தி, மேலும் அவரது நண்பர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப் போவதாகவும் கத்தியைக் காட்டி மிரட்டினார் என்றும் கூறப்படுகிறது.

தானாக முன்வந்து காயப்படுத்தியது, வலுக்கட்டாயமாக மிரட்டியது ஆகிய குற்றங்களுக்காக இன்று (செப். 10) அவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழப்பு