சில்லென்ற மழை! சிங்கையை குழுவிக்கும்! – இடியுடன் கூடிய மழை தொடரும்…!

சிங்கப்பூரில் இந்த மார்ச் மாதத்தின் முதல் 2 வாரங்களில் பெரும்பாலான நாட்களில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வகம் கூறியுள்ளது.

தீவின் சில பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய குறுகிய நேர மழை எதிர்பார்க்கப்படுகிறது, அது சில நாட்களில் மாலை வரை நீடிக்கும்.

சிங்கப்பூரில் வேலையை தக்க வைக்க பணம்… சொந்த நாடு திரும்பிய அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள்!

ஒட்டுமொத்தமாக, மார்ச் முதல் பாதியில் சராசரி விட அதிகமான மழைப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினசரி அதிகபட்ச வெப்பநிலையானது சில நாட்களில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸை எட்டும்.

பெரும்பாலான நாட்களில், தினசரி வெப்பநிலை 24°C முதல் 33°C வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பணிப்பெண்கள், பிற Work permit உடையோருக்கு ஆறு மாத மருத்துவப் பரிசோதனை நிறுத்தி வைப்பு!