மரினா பே சாண்ட்ஸ் ஷாப்பிங் மாலுக்கு வெளியே நடந்த கொடூரம்: துப்பாக்கி சுட்டு பலியான போலீஸ் அதிகாரி

Marina Bay Sands shopping mall police-officer death
Google Maps

மரினா பே சாண்ட்ஸ் ஷாப்பிங் மாலுக்கு வெளியே 29 வயதான போலீஸ் அதிகாரி ஒருவர் சடலமாக கிடந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்ததாகவும் சொல்லப்படுகிறது என்று Lianhe Zaobao செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பீச் ரோட்டில் ஆடவரை தாக்கிய சந்தேகத்தில் ஒருவர் கைது; காயங்களுடன் இருந்த ஆடவர் மருத்துவனையில் அனுமதி

இது குறித்து கூறிய காவல்துறையின் செய்தித் தொடர்பாளர்; அவர் மத்திய காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி என்றும், அவர் துப்பாக்கியால் சுடப்பட்ட காயத்துடன் சடலமாக கிடந்ததாகவும் கூறியுள்ளார்.

இச்சம்பவம் இன்று செப். 19ஆம் தேதி காலை 9.44 மணியளவில் 1 பேஃப்ரண்ட் அவென்யூவில் (Bayfront Avenue) நடந்தது.

மேலும், சம்பவ இடத்தில் துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு அது அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் கூடுதல் தகவலாக, அதிகாரி வானத்தை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மயக்க நிலையில் இருந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் காயங்களால் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், போலீசார் இதில் ஏதும் சதிச்செயல் இருப்பதாக சந்தேகிக்கவில்லை, விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு விபத்து ஏற்பட்டாலோ, அதனால் இறந்தாலோ நிறுவனங்கள் தான் பொறுப்பு – MOM அதிரடி அறிவிப்பு