மார்சிலிங் பார்க்கில் மரம் விழுந்து அதன் அடியில் சிக்கி பெண் ஒருவர் இன்று (பிப்ரவரி 18) உயிரிழந்தார்.
காலை 8.15 மணியளவில், உதவி வேண்டி அழைப்பு வந்ததாகவும், 38 வயதான பெண் சம்பவ இடத்தில் அசைவில்லாமல் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்திய கல்வி தகுதி… Work pass ஊழியர்கள் 15 பேரிடம் மனிதவள அமைச்சு விசாரணை…..!
அதே வேளையில், சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படைக்கும் (SCDF) தகவல் அளிக்கப்பட்டது.
மரத்தின் அடியில் சிக்கிய அந்த பெண்ணை பத்திரமாக மீட்பதற்காக அவர்கள் மரம் வெட்டும் உபகரணங்களை பயன்படுத்தினர்.
ஆனால், அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக SCDF துணை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இயற்கைக்கு மாறான அந்த மரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடுதல் விவரங்கள் கிடைத்த பின்னர் பதிவு தொடரும்…
“சென்னை-சிங்கப்பூர்-மதுரை” இடையே விமான பயணம் – மார்ச் வரை முன்பதிவு தொடக்கம்