மார்சிலிங் லேன் ஃபுட் சென்டரில் அமைந்துள்ள Marsiling Teochew Fish Soup என்ற உணவங்காடி நிலையம் நேற்று (மே 11) தீப்பிடித்து எரிந்தது.
அந்த கடையில் தீப்பற்றி எரியும் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
கட்டட ஊழியர்களுக்கு செம்ம வாய்ப்பு… ஜூன் மாதம் முதல் பயிற்சி – சம்பளம் உயரலாம்
கடையின் சமையல் செய்யும் பகுதியில் இருக்கும் புகை வெளியேற்றும் குழாயில் தீ மூண்டதாக சொல்லப்பட்டுள்ளது.
பிளாக் 20 மார்சிலிங் லேனில் நேற்று காலை 8:20 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) உறுதிப்படுத்தியது.
தற்காப்புப் படை வருவதற்கு முன்பு சுமார் 40 பேர் சுயமாக வெளியேறினர்.
மேலும் ஒருவர் தீக்காயங்களுடன் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில், தீ விபத்துக்குள்ளான கடையின் அடுப்பு பகுதியில் இருந்து தீ பரவியதாக கூறப்படுகிறது.
சிங்கப்பூர் TOTO லாட்டரியில் ChatGPT பயன்படுத்தி வென்று ஆச்சரியப்படுத்திய ஆடவர்