தன் குடும்பத்தை எப்படியாவது முன்னேற்றி விடுவோம் என ஓடிக்கொண்டிருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்

foreigners need social works
Pic: Roslan RAHMAN / AFP

உழைக்கும் வர்க்கம் அனைவருக்கும் மே 1 ஆம் நாள் மரியாதையை செலுத்தும் நாளாக வருடம்தோறும் அனுசரிக்கப்பட்டு வருவது நாம் அறிந்தது தான்.

குறிப்பாக சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இந்த மே தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

தன் குடும்ப வறுமையை போக்க வேண்டும், நம் குடும்பமும் சமுதாயத்தில் தலை தூக்கி நடக்க வேண்டும் என்ற பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழக ஊழியர்கள் ஏராளம்.

தன் பெண் பிள்ளையை நல்ல இடத்தில் திருமணம் செய்து தர வேண்டும், தன் ஆன் பிள்ளையை உயர்ந்த படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்று தன்னை தாழ்த்தி, தன் முதலாளிகளிடம் அவமானம் பட்டாலும், கேவலமாக நடத்தப்பட்டாலும் அதையெல்லாம் தன் குடும்பத்துக்காக சிரித்திக்கொண்டே கடந்து செல்கிற வெளிநாட்டு ஊழியர்கள் என்னும் தியாகிகளுக்கு வாழ்த்துக்கள்.

வெயில், மழை பாராது கடினமாக உழைக்கும் நம் சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரும் நாட்கள் நல்லபடியாக அமைய வேண்டும் என கடவுளை பிராத்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறது தமிழ் மைக்செட் டீம்.