கடை புகுந்து திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகத்தில் இருவர் கைது

men-steal-cough-syrup-from-clinic
Unsplash

சிங்கப்பூரில் கடை புகுந்து திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று நவம்பர் 27 ஆம் தேதி காலை 8:35 மணியளவில் பாசிர் ரிஸ் டிரைவ் 10 கிளினிக் உடைக்கப்பட்டது குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் உஷார்: பாதுகாப்புடன் இருங்கள்… குறிப்பாக work permit ஊழியர்கள்

அங்கு சுமார் S$432 மதிப்பிலான இருமல் சிரப்பின் முப்பத்தைந்து பாட்டில்கள் திருடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

விசாரணைகள் மற்றும் CCTV உதவியுடனும், பெடோக் போலீஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அந்த இரண்டு பேரின் அடையாளத்தை கண்டறிந்தனர்.

அதன் பின்னர் 28 மற்றும் 29 வயதுடைய அவர்கள் இருவரும் நவ., 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கைது செய்யப்பட்டனர்.

வேலையில் இருந்து நீக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு – ஊழியர்களின் வயது 35க்கும் குறைவு என்பது அதிர்ச்சி தகவல்