மெர்லியன் பார்க்கில் உள்ள நீர்ப்பகுதியில் மிதந்த 31 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் – யார் அவர் ?

indian worker jailed stalking woman work
Singapore

மெர்லியன் பார்க்கில் உள்ள நீர்ப்பகுதியில் 31 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவரின் சடலம் மிதந்ததை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று சனிக்கிழமை (ஜன. 7) மாலை 6.30 மணியளவில் இது தொடர்பான உதவி வேண்டி அழைப்பு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிங்கப்பூர் TOTO ஜாக்பாட் குலுக்கலில் S$1 டிக்கெட் வாங்கி S$5.5 மில்லியன் பரிசை தட்டிச்சென்ற அதிஷ்டசாலி!

அதே நேரத்தில் 21 எஸ்பிளனேட் டிரைவில் மீட்பு உதவி வேண்டி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் (SCDF) கூறியது.

உடலை மீட்டு சோதித்ததில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது.

மேலும் முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் சதிச்செயல் நடந்ததாக சந்தேகிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

சிங்கப்பூர் தைப்பூசம் 2023…. 30,000 பக்தர்கள், 200 காவடிகள்… பிரம்மாண்டமாக மீண்டும் வரும் தைப்பூசத் திருவிழா!