சிங்கப்பூரில் வேலை செய்யும் ஊழியர்… சொந்த ஊரில் மர்ம நபர்கள் கைவரிசை – போலிசார் வலைவீச்சு

migrant worker home gold steal
TN POLICE

தமிழ்நாடு: சிங்கப்பூரில் வேலை செய்யும் தமிழ்நாட்டு ஊழியரின் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

பேரூர் பகுதி சுண்டக்காமுத்தூர் ஊரை சேர்ந்தவர் 37 வயதான அர்ஜுன், இவர் சிங்கப்பூர் பேங்கில் வேலை செய்து வருகிறார்.

சிங்கப்பூர் டோட்டோ டிராவில் S$7.2 மி. பரிசுத்தொகையை தட்டிச் சென்ற ஒரே ஒருவர் – S$1 க்கு டிக்கெட் வாங்கிய அதிஷ்டசாலி

சொந்த ஊரில் உள்ள அர்ஜுனின் வீட்டில் அவரின் அம்மா மட்டும் வசித்து வரும் நிலையில், கடந்த ஜன.23 ஆம் தேதி அவர் சேலம் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

பின்னர் ஜன.28 ஆம் தேதி வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது பூட்டிய வீட்டின் கதவுகள் திறந்து, பீரோவில் இருந்த ஏழே முக்கால் பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதோடு மட்டுமல்லாமல் 1 முக்கால் கிலோ வெள்ளி பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சிங்கப்பூரில் இருந்து விரைந்து தமிழ்நாடு திரும்பிய அர்ஜுன் இது குறித்து நேற்று போலீசில் புகார் செய்தார்.

இந்நிலையில், வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

ஏஜென்சி கூறிய பொய்… முதலாளிக்கும், ஊழியருக்கு மொழியால் ஏற்பட்ட சண்டை – போலீஸ் எடுத்த முடிவு