சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சுமார் 30,000 டோனட்ஸ் என்னும் இனிப்பு பண்டம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் சமூக தொண்டூழிய அமைப்பான, இட்ஸ்ரெய்னிங் ரெயின்கோட்ஸ் (ItsRainingRaincoats), தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த அன்பளிப்பை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளது .
மொத்தம் 850 அட்டைப்பெட்டிகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன, இதில் ஒரு பெட்டியில் தலா 24 முதல் 36 வரை டோனட்ஸ் பண்டம் இருந்ததாக கூறியுள்ளது.
தன்னார்வலர் ஒருவர் இரண்டு குழந்தைகளுடன், சிங்கப்பூரைச் சுற்றியுள்ள வீதிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இனிப்பை விநியோகம் செய்ய ஒரு நாள் முழுவதும் செலவு செய்தனர்.
சாலை ஓரம் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த பண்டம் விநியோகம் செய்யப்பட்டது, அதற்காக தங்கள் நன்றி கலந்த மகிழ்ச்சியை ஊழியர்கள் வெளிப்படுத்தினர்.