சென்னை செல்கிறார் சிங்கப்பூர் கல்வி அமைச்சர் ஓங் !!

Education Minister Ong Ye Yung visit chennai

சிங்கப்பூரும் இந்தியாவும் இணைந்து சென்னையில் அதன் இரண்டாவது புத்தாக்கப் போட்டியை IIT மெட்ராஸ் கல்லூரியில் நடத்தவுள்ளன.

கடந்த ஆண்டு நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு புத்தாக்கப் போட்டிகள் நடந்தன. இந்த ஆண்டு வரும் 30ஆம் தேதி IIT மெட்ராஸ் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கல்வி அமைச்சர் ஓங் யீ காங் கலந்துகொள்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொள்ள இருக்கிறார். நிகழ்ச்சியில் 120க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஓங் , பிரதமர் மோடியையும் சில அரசாங்க அதிகாரிகளையும், வர்த்தகத் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார். அவர்கள் சுற்றுச்சூழல், கல்வி, மருத்துவம் சார்ந்த விவகாரங்களுக்குப் புத்தாக்கத் தீர்வுகளை ஆராய்வர்.

இந்தியப் பயணத்தில் அமைச்சர் ஓங் UNESCO மரபுடைமைத் தலமான மாமல்லபுரத்தையும் பார்வையிடவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.