நுஸ்ரா முஸ்பிரா பிண்டே நாஜிம் என்ற 15 வயது சிறுமியை காணவில்லை என சிங்கப்பூர் காவல் படை (SPF) தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், அந்த சிறுமி குறித்த தகவல் தெரிந்தவர்கள் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தீவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கை – 303 பேரிடம் போலீசார் விசாரணை
சிறுமியை கடந்த டிச., 16 ஆம் தேதியில் இருந்து காணவில்லை.
SPF கூறியதாவது; அவர் கடைசியாக தியோங் பாரு MRTஇல் காணப்பட்டார் என்றும், கருப்பு சட்டை மற்றும் சிவப்பு ஜீன்ஸ் அணிந்திருந்தார் என்றும் கூறியுள்ளது.
சிறுமியை கண்டால் “999” என்ற எண்ணை அழைக்குமாறு பொதுமக்களை காவல்துறை கேட்டுக்கொள்கிறது.
நுஸ்ரா காணாமல் போனது இது இரண்டாவது முறை என்பதை SPF உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னர், அவர் நவம்பர் 28 ஆம் தேதி, தியோங் பாருவில் உள்ள பியோ கிரசண்ட் அருகே கடைசியாக காலை 10:15 மணியளவில் காணப்பட்டார்.
பின்னர் கடந்த டிச., 8ம் தேதி காலை 11:31 மணிக்கு, நுஸ்ரா கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தகவல் கொடுத்தனர்.