சிங்கப்பூருக்கு டியூஷன் சென்டரில் கல்வி கற்பிக்க வந்த 22 வயது மலேசியப் பெண்ணை மூன்று நாட்களாகக் காணவில்லை என்று கூறப்பட்டது.
அவர் கடைசியில், பாசிர் ரிஸில் உள்ள Api Api ரிவரில் நேற்று முன்தினம் ஜனவரி 18 அன்று இரவு சடலமாக மிதந்ததாக லியான்ஹே ஸோபாவோ தெரிவித்துள்ளது.
மலேசியாவின் கெடாவைச் சேர்ந்த கூ யீ ஜூ என்ற அந்த பெண், கடந்த ஜனவரி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சாய் சீயில் காணாமல் போனதாக கூறப்பட்டுள்ளது.
அவரை தொடர்பு கொள்ள முடியாததால், சிங்கப்பூரில் இருக்கும் அவரது அத்தை, கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு 2 மணியளவில் காவல் நிலையத்திற்குச் சென்று அவரை காணவில்லை என்று புகார் அளித்தார்.
ஜனவரி 18ஆம் தேதி இரவு 7:11 மணியளவில் பாசிர் ரிஸில் உள்ள Api Api ரிவரில் சடலம் மிதப்பது குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றினர். அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்பதும் உறுதி செய்யப்பட்டது.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இதில் சதிச் செயல் ஏதும் இல்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.
சிங்கப்பூரில் உங்களுக்கு வங்கி கணக்கு இருக்கா? – வங்கிகள் மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள்