சிங்கப்பூரில் கள்ளப் பண நோட்டு தொடர்பில் 6 பேர் கைது

money_laundering
SPF

சிங்கப்பூரில் கள்ளப் பண நோட்டுகளை நல்ல பணமாக மாற்றியதாக 4 ஆடவர்கள், 2 பெண்கள் என 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் 20 முதல் 51 வயதுக்கு உட்பட்ட நபர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது, போலீசார் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையில் அவர்கள் சிக்கினர்.

அந்த ஆறு பேரோடு சேர்த்து மேலும் இரு பெண்களிடம் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூரில் உயரத்திலிருந்து விழுந்தும், வாகன விபத்திலும் ஊழியர்கள் பலி – பாதுகாப்பு முக்கியம்…மீறினால் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க தடை

இதில் சுமார் S$19,000 ரொக்க பணம், 16 கைபேசிகள், 30 க்கும் கூடுதலாக SIM கார்டுகள் கைப்பற்றப்பட்டன.

அதோடு சேர்த்து 150 ATM கார்டுகளும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிங்கப்பூரில் இருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு இனி அதிக கட்டணம்!