இரண்டு உடும்புகள் ஒரு பிரம்மாண்டமான மீனை உண்ணும் காட்சிகள் இணையத்தில் வைரலானது. அதனை பல அதிர்ஷ்டசாலி பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.
சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவில் உள்ள கெப்பல் டிஸ்கவரி வெட்லேண்ட்ஸ் என்ற இடத்தில் இந்த இயற்கை கண்கவர் காட்சி அரங்கேறியது.
செல்பி எடுப்போருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை, அபராதம் கட்டாயம் – எச்சரிக்கை
கடந்த ஜனவரி 16 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் இந்த காட்சிகளை Stomper Komeadow கண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவைப் பகிர்ந்துகொண்டு அவர் கூறியது:
“அது என்ன மீன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் தாவரவியல் பூங்காவில் இந்த அளவில் பெரிய மீன் இருந்துள்ளது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.”
“அதன் நீளம் சுமார் இரண்டு மீட்டர், குறுக்குவெட்டு விட்டம் 30cm முதல் 40cm வரை இருந்தது” என்றும் அவர் குறிப்பிட்டு ஆச்சரியப்பட்டார்.
இந்தியப் பெண்ணை மார்பில் எட்டி உதைத்து, இன ரீதியாக கொச்சைப்படுத்திய சிங்கப்பூர் நபர்