2 மோட்டார் சைக்கிள்கள், வேன் சம்பந்தப்பட்ட விபத்து: 3 மாத கர்ப்பிணி மனைவியை விட்டு பரிதாபமாக உயிரிழந்த ஆடவர்!

gambas-avenue-fatal-accident
Shin Min Daily News

உட்லண்ட்ஸில் உள்ள காம்பாஸ் அவென்யூவில் (Gambas Avenue) யிஷுன் அவென்யூ 7 நோக்கி செல்லும் வழியில் நேற்று ஏப்ரல் 10 ஆம் தேதி மதியம் 1 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு வேன் விபத்துக்குள்ளானதில் 24 வயதான ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.

வேன் பாதையை மாற்றியதாகவும், அதனை தவிர்க்க மோட்டார் சைக்கிள் ஓட்டி முயன்றதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

குழந்தைகள், ஆண்கள் இருக்கும் இடத்தில் இப்படியா நடந்துகொள்வது.. முகம் சுளித்த தமிழர்கள் – சமூக பொறுப்பு முக்கியம்

அவ்வாறு சென்ற போது, ​​மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இறந்தவரின் 12 நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விபத்து நடந்த இடத்திற்கு ஒன்றன் பின் ஒன்றாக வந்தனர். பின்னர், உடலை அடையாளம் காண அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

“அப்பாவும் அம்மாவும் உன்னை அதிகம் நேசித்தார்கள், உன்னுடைய குழந்தை இன்னும் பிறக்கவில்லை” என்று அவரின் மூத்த சகோதரர் கண்ணீர்மல்க ஷின் மின்னிடம் கூறினார்.

தற்போது உயிரிழந்தவரின் மனைவி மூன்று மாத கர்ப்பிணி பெண் என்றும் ஷின் மின் தகவல் கூறியுள்ளது.

வலைத்தளம் வழியாக விபத்து தொடர்பான சாட்சிகளைத் தேடும் பணியில் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி, ஆடவர் ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்திய 36 வயதுடைய வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உணவகத்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட ஆடவர்… 3 மணி நேரத்தில் கைது செய்த போலீஸ் – காத்திருக்கும் பிரம்படி