தெம்பனீஸ் எக்ஸ்பிரஸ்வே ஸ்லிப் சாலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற 27 வயதுமிக்க பெண் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
சம்பவத்தின் விவரங்கள் ஆன்லைனில் பகிரப்பட்டன, அதோடு சேர்த்து இதனை கண்டவர்கள் முன்வந்து தகவல் தருமாறும் அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
சிங்கப்பூரில் 7 நீண்ட வார இறுதி விடுமுறை நாட்கள் – என்ஜாய் பண்ணுங்க
இச்சம்பவம் கடந்த ஜனவரி 2ம் தேதி அன்று நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் சறுக்கி விபத்தில் ஏற்பட்டதாகவும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
வேறு எந்த வாகனங்களும், வாகன ஓட்டிகளும் இந்த விபத்தில் சிக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.
அன்று மாலை 4:35 மணிக்கு சிலேத்தர் விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் TPE சாலையில் ஏற்பட்ட விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) உறுதிப்படுத்தியது.
இதனையடுத்து அந்த பெண் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மீண்டும் முதல்ல இருந்தா… சிங்கப்பூர்-இந்தியா பயணிகளுக்கு தான் கடும் நடைமுறை – NEW Update