சிங்கப்பூர்: மூன்று மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 16 வயது சிறுவனை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர்.
புங்கோல் டிரைவ், புங்கோல் சென்ட்ரல் மற்றும் புங்கோல் ஃபீல்ட் ஆகிய பகுதிகளில் கடந்த செப். 9 மற்றும் செப்.12 க்கும் இடையில் மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டது குறித்து புகார்கள் வந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
அதனை அடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கேமராக்களில் உதவியுடன் அவரின் அடையாளத்தை கண்டறிந்து, நேற்று முன்தினம் செப்., 12ல் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன. அவர் மீது இன்று செப். 14 ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
இந்த திருட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு திருட்டுச் செயலுக்கும் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
மரண தண்டனை பெற்ற 20க்கும் மேற்பட்ட குற்றாவளிகளுக்கு மாற்று தண்டனை – மலேசியா அதிரடி