மார்பகத்தை மேலும் மெருகேற்ற வேண்டி ஊசி போட்டுக்கொண்ட பெண் மரணம்

msia-woman-breast-enhancement-death
China Press

மார்பகத்தை மேலும் மெருகேற்ற வேண்டி ஊசி போட்டுக்கொண்ட பெண் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

29 வயதான மலேசியப் பெண் ஒருவர், உரிமம் பெறாத அழகுக்கலை நிபுணரிடம் அந்த ஊசியைப் போட்டுக்கொண்டதாக மலேசிய உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குழந்தைகளை பிரிந்து வாடுவதாக கவலை கொண்ட வெளிநாட்டு ஊழியர் – “உங்களால் தான் இன்று சிங்கப்பூர்” அன்பளிப்பு வழங்கிய சிங்கப்பூரர்

மார்பகத்தை மெருகேற்ற பெண்ணின் மார்பில் தெர்மல் நிரப்பிகள் கொண்ட ஊசி போடப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஊசி போட்டுக்கொண்ட பிறகு மார்பகத்தில் வலி ஏற்பட்டதாகவும், அவரால் நிம்மதியாக தூங்க முடியாமல் போனதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்தது, முதுகு மற்றும் கால்களில் வலி ஏற்பட்டதால் அவரால் நகரவோ நடக்கவோ முடியவில்லை.

ஆகஸ்ட் 2ம் தேதி, காலை 5 மணிக்கு அவசர சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவர், சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, அதாவது காலை 7 மணிக்கு உயிரிழந்தார்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

“சிங்கப்பூரில் சிறந்த வேலை..” – 4,000 இளம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிங்கப்பூர் குடிமக்கள் அந்தஸ்து