ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி சிங்கப்பூரில் குடும்ப அலுவலகம் திறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த அறிக்கையின்படி, முகேஷ் அம்பானி குடும்ப அலுவலகத்தை சிங்கப்பூரில் அமைப்பதற்காக பணியாளர்களை நியமிக்க மேலாளரைத் தேர்ந்தெடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் அனைத்து COVID-19 தடுப்பூசி கட்டுப்பாடுகளும் நீக்கப்பட உள்ளது – அக்.10 முதல் அமல்
சிங்கப்பூரில் குடும்ப அலுவலகத்தை அமைக்கும் அம்பானியின் இந்த முடிவு என்பது, இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் அவரது வணிகத்தை கொண்டு செல்லும் நோக்கத்தை குறிப்பதாக தெரிகிறது.
அதோடு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கு வெளியே சொத்துக்களை வாங்கும் அவரின் எண்ணங்களையும் இது வெளிப்படுத்துகிறது.
சிங்கப்பூரில் குறைந்த வரி மற்றும் பாதுகாப்பு காரணமாக குடும்ப அலுவலகங்களை அமைப்பதற்கு செல்வந்தர்களுக்கு சமீபத்திய விருப்பமான இடமாக சிங்கப்பூர் உருவெடுத்துள்ளது.
இந்த பட்டியலில் ஹெட்ஜ் ஃபண்ட் பில்லியனர் ரே டாலியோ மற்றும் கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் ஆகியோரும் அடங்குவர்.
அந்த அலுவலகம் ஒரு ஆண்டு காலத்துக்குள் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட சாதனங்கள் விற்பனை: 17 பேர் கைது