வாடிக்கையாளர்களுக்கு இன்பச் செய்தி கூறிய “முஸ்தபா சென்டர்”

Mustafa Centre important announcement
(Photo from Google Maps)

முஸ்தபா சென்டர் அதன் திறப்பு நேரத்தை நள்ளிரவை தாண்டி 2 மணி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த மாதம் ஜூலை 1 முதல் இந்த இயக்க நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் மதர்ஷிப்பிடம் தெரிவித்தார்.

கட்டுமான ஊழியர்கள் அதிகம் இறப்பு… வேலையிட விபத்துகளுக்கு இதான் காரணம் – ஊழியர்கள் நச் பதில்!

சிங்கப்பூரின் மிகப்பெரிய ஷாப்பிங் மாலான முஸ்தபா சென்டர், கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்பு இருந்ததைப் போல 24/7 மணி நேரமும் செயல்படவில்லை என்றாலும் இந்த நீட்டிக்கப்பட்ட நேரம் ஒரு முக்கியமாக பார்க்கப்படுகிறது.

தற்போதைய மாற்றத்திற்கு முன், முஸ்தபா சென்டர் தினமும் காலை 9:30 மணி முதல் இரவு 11:30 மணி வரை மட்டுமே திறந்திருந்தது.

சுமார் 639 கிலோ மெல்லும் புகையிலை… பக்கா ஸ்கெட்ச் போட்ட அதிகாரிகள் – சிக்கிய நபர்கள்!