சிங்கப்பூரில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள சிங்கப்பூர் பிரதமர் திரு. லீ சியன் லூங் அவர்களுக்கு வாழ்த்து கூறி இந்திய பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்டில், பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் லீ சியன் லூங்-ற்கு வாழ்த்துக்கள். சிறப்பான வளமான எதிர்காலம் அமைய சிங்கப்பூர் மக்களுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
Congratulations to Prime Minister @leehsienloong for success in the General Elections! Best wishes to the people of Singapore for a peaceful and prosperous future.
— Narendra Modi (@narendramodi) July 11, 2020
சிங்கப்பூரில் மக்கள் செயல் கட்சி (PAP) 61.24 சதவீத வாக்குகளைப் பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்க உள்ளது.
இந்த பொதுத் தேர்தலில் 93 நாடாளுமன்ற இடங்களில் 83 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
கடந்த 2015 பொதுத் தேர்தலில், 29 தொகுதிகளில் மக்கள் செயல் கட்சி 89 இடங்களுக்கு 83 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றது.