இந்தாண்டு சிங்கப்பூர் தேசிய தின அணிவகுப்பை நேரில் கண்டுகளிக்க மரினா பே மிதக்கும் மேடை அரங்கத்துக்கு மிகுந்த ஆர்வத்துடன் பல்வேறு பார்வையாளர்கள் சென்றனர்.
அரங்கம் முழுவதும் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.பல மாதகாலப் பயிற்சி,ஒத்திகையின் உச்சகட்டப் பலனாக ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட அணிவகுப்பைக் கண்டு சிங்கப்பூரர்கள் மெய்மறந்தனர்.
பெருந்தொற்றுப் பரவல் காரணமாக மூன்றாண்டுகளுக்குப் பிறகு அணிவகுப்பு பெரிய அளவில் நடைபெற்றது.நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரங்கிற்கு வந்த பிறகு ரெட் லையன்ஸ் வானிலிருந்து மிதக்கும் மேடையில் குதித்து சாகசம் புரிந்தனர்.மேலும் சிங்கப்பூர் விமானப் படையின் போர் விமானங்கள் வானில் பலவித சாகசம் புரிந்தன.
இது பார்வையாளர்களை பரவசம் அடையச் செய்தது.ஹெலிகாப்டரிலிருந்து கடற்படை முக்குளிப்பாளர்கள் கடலில் குதித்து திறமையை வெளிப்படுத்தினர்.