நாளை தேசிய தின பேரணி உரையாற்றுகிறார் பிரதமர் லீ சியன் லூங்!

(PHOTO: MCI)

 

சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் (Prime Minister Office, Singapore) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நாளை (ஆகஸ்ட் 20- ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை அன்று அங் மோ கியோவில் (Ang Mo Kio) உள்ள தொழில்நுட்பக் கல்விக் கழக மத்திய கல்லூரியில் (Institute of Technical Education- ‘ITE’) தேசிய தின பேரணி 2023 (National Day Rally 2023) உரையை ஆற்றுகிறார் பிரதமர் லீ சியன் லூங். தேசிய தின பேரணி உரையை ஆகஸ்ட் 20- ஆம் தேதி மாலை 06.45 மணிக்கு மலாய் மொழியில் தொடங்குகிறார்.

ஸ்ரீ சிவன் கோயிலில், மஹா ருத்ரம் பூஜை!

அதைத் தொடர்ந்து, இரவு 07.00 மணிக்கு மாண்டரின் மொழியிலும், இரவு 08.00 மணிக்கு ஆங்கிலம் மொழியிலும் உரையாற்றுக்கிறார். பிரதமரின் பேரணி உரையை உள்ளூர் தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் நேரலை செய்யப்படும்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த மதுரை பயணி – அப்டியே அலேக்கா தூக்கிய போலீஸ்

சிங்கப்பூர் பிரதமரின் அதிகாரப்பூர்வ யூடியூப் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களிலும் உரை நேரலை செய்யப்படும். இதனை பொதுமக்கள் வீட்டில் இருந்த படியே காணலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.