தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகை நயன்தாரா. தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் இவர். நானும் ரவுடி தான் படத்திலிருந்தே நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலர்களாக வலம் வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 18-ம் தேதி நடிகை நயன்தாராவின் 35-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பல்வேறு திரை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து கூறினார். அமெரிக்காவில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் பிறந்தநாளை தனியாக கொண்டாடினர், அங்கு தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டனர்.
இது ஒருபுறம் இருக்க, நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு சிங்கப்பூரில் உள்ள அவரது ரசிகர் ஒருவர் நயனுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார். மேலும், நயன்தாரா பெயரில், சிங்கப்பூர் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவிலில் அர்ச்சனையும் செய்துள்ளார். இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.