சிங்கப்பூர் சாலைகளில் மேலாடையின்றி ஓடிய ஆடவர்: வளைத்து பிடித்த போலீஸ்!

no-shirt-man-apprehended sengkang

சிங்கப்பூரில் மேலாடையின்றி சாலைகளில் ஓடிய 36 வயது ஆடவரை போலீஸார் கைது செய்தனர்.

Seletar Mall அருகே உள்ள செங்காங் கிரீன் பிரைமரி பள்ளிக்கு வெளியே அரை நிர்வாணமாக இருந்த அந்த ஆடவரை போலீஸ் அதிகாரிகள் துரத்துவதை ஃபேஸ்புக்கில் வெளியான வீடியோவில் காணமுடிகிறது.

ஆழமான வடிகாலில் விழுந்த சிங்கப்பூர் பெண்ணின் AirPod: கனமழையிலும் ஓடிச்சென்று உதவிய “வெளிநாட்டு ஊழியர்”!

அவ்வழியே செல்பவர்கள் அவரை கண்டு அந்த இடத்தை விட்டு விலகிச் செல்வதையும் காண முடிந்தது.

பின்னர் அந்த ஆடவர் போலீஸ் அதிகாரிகளால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு கைது செய்யப்பட்டார்,

இந்த சம்பவம் தொடர்பாக மார்ச் 13 அன்று பிற்பகல் 1.10 மணியளவில் Fernvale ரோட்டில் இருந்து உதவி வேண்டி அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆடவர் மனநல பரிசோதனைக்காக அனுப்பப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

“கையில் ஆயுதத்துடன் யாரையோ தேடிக்கொண்டிருந்த ஆடவர்” – கைது செய்யும்போது போலீஸ் மீது வீசியதால் பரபரப்பு!