தொழிலாளர்கள் வழங்கு தொகைக்கு விண்ணப்பிக்கலாம் – சிங்கப்பூர் NTUC-யின் திட்டம்

ntuc care fund to worker
சிங்கப்பூரில் அதிகரித்துவரும் பணவீக்கத்தால் விலைவாசி கிடுகிடுவென உயர்கிறது.குறைந்த வருமானம் உடைய கிட்டத்தட்ட 28,000 ஊழியர்கள் அவர்களின் அன்றாடச் செலவினங்களைச் சமாளிக்க,தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC) உதவித் திட்டத்தின் கீழ் $150 வரையிலான உதவித்தொகை வழங்கப்பட உள்ளதால் விண்ணப்பிக்கலாம்.
ஒரு ஊழியரது வருமானத்தையும் தகுதிக்கூறையும் பொருத்து நிதியுதவி வழங்கப்படும்.விண்ணப்பதாரர் NTUC-இன் உறுப்பினராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் NTUC உறுப்பினர் கட்டணத்தைச் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருக்கக் கூடாது.
குறைந்தபட்சம் ஆறுமாத கட்டணத்தை தொடர்ச்சியாக செலுத்தியிருக்க வேண்டும்.ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை https://ucare.ntuc.org.sg/assistance/ எனும் இணையப்பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஆதரவுத் தொகைக்கு தகுதிபெறும் விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்கிற்கு 30 நாட்களுக்குள் பணம் பரிமாற்றம் செய்யப்படும்.