சிங்கப்பூர் NUS நூலகத்தில் பெண்ணிடம் ஆபாசமாக நடந்துகொண்டதாக மாணவர் மீது குற்றச்சாட்டு..!!

NUS student allegedly exposed himself in front of woman in university's science library

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (NUS) மாணவர் ஒருவர் தனது அந்தரங்க பகுதிகளை அம்பலப்படுத்தியதாகவும், கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி பல்கலைக்கழக அறிவியல் நூலகத்தில் ஒரு பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

சிங்கப்பூரை சேர்ந்த சியோங் ஜியாவே (27), நீதிமன்றத்தில் பெண்ணை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டார். அவரது வழக்குக்கான விசாரனை அடுத்த செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று சிங்கப்பூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் குறித்து ஆராய கடந்த ஜூன் மாதம் ஒழுங்கு வாரியம் ஒன்று கூட்டப்பட்டதாக நேற்று ஒரு அறிக்கையில் NUS தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அந்த மாணவர் பல்கலைக்கழகத்திலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார் என்று NUS பல்கலைக்கழகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.