இலவசமாக இறால் வடை! -ஆனால் ஒருத்தருக்கு ஒரு வடைதான்! பூன் லேயில் கடைத் திறப்பு விழா

vadai-pc-prawn vadai
சிங்கப்பூரின் மேற்கில் முதல் வடை விற்பனையகம் நாளை (நவ. 4) முதல் செயல்பட உள்ளது. பூன் லேயில் வெள்ளிகிழமை திறக்கப்படும் ஒரிஜினல் வடை விற்பனையகம் அதன் 9-ஆவது நிலையம் ஆகும்.8 வடை கடைகள் சிங்கப்பூரின் கிழக்குப்பகுதியிலும் நகரப்பகுதியிலும் அமைந்திருப்பதால்,தற்போது மேற்கில் கடை நிறுவப்பட்டுள்ளது.
கடைத் திறப்புவிழாவின் போது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பு இறால் வடை இலவசமாக வழங்கப்பட உள்ளது.எந்த வாங்குதலுமின்றி வடை இலவசமாக அளிக்கப்படும் என்று தி ஒரிஜினல் வடையின் நிறுவனர் ஸ்டீவன் சூர்யா தெரிவித்துள்ளார்.ஆனால்,ஒரு நபருக்கு ஒரு வடை மட்டுமே இலவசம் என்றும் கூறினார்.
இந்த வடை கடை நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் இயங்கும்.அதாவது காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.கடந்த அக்டோபர் மாதத் தொடக்கத்தில் இருந்தே தி ஒரிஜினல் வடையின் பேஸ்புக் பக்கத்தில் கடைத் திறப்பு பற்றி கூறப்பட்டது.ஆனால் தேதி வெளியிடப்படவில்லை.

இந்தக் கடையில் இறால் வடை,ஐகான் பிலிஸ், பருப்பு, மிளகாய் மற்றும் வெங்காயம் போன்ற சுவைகளிலும் கிடைக்கிறது.மேலும்,கோழி கல்லீரல் மற்றும் சிக்கன் கிஸார்ட் போன்ற உணவுகளும் கிடைக்கும்.