குடிக்க பீர் தரல! அதான் தீயால கொளுத்திட்டேன்! – குடிகார முதியவரின் வெறிச்செயல்!

old man lighter accelerant
டிசம்பர் 28 புதன்கிழமை இரவு 37 வயதுடைய நபரை தீ வைத்து எரித்ததாக 65 வயது நபர் மீது கொலை முயற்சி குற்றம் சாட்டப்பட்டது.சம்பவம் மார்சிலிங் கிரசென்ட் பகுதியில் அமைந்துள்ள மினிமார்ட் அருகே நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்திற்குப் பின்னர் மினிமார்ட் இன்னும் மூடப்பட்டிருக்கிறது.அதற்கு அருகிலுள்ள கடல் உணவு உணவகத்தின் தொழிலாளி அளித்த தகவலின்படி, குற்றம்சாட்டப்பட்ட 65 வயதான Tay Kheng Hock, Heng Hock Minimart இல் பீர் வாங்கச் சென்றார்.
கடை உரிமையாளர் Tan முதியவருக்கு பீர் வழங்காமல் நிராகரித்தார்.இதனால் ஆத்திரமடைந்த முதியவர், எரிபொருளை Tan மீது ஊற்றி, லைட்டரால் அவரைக் கொளுத்தினார்.
முதியவருக்கு எரிபொருள் எங்கிருந்து கிடைத்தது என்பது தெரியவில்லை.அங்கிருந்த அவரது சக ஊழியர் பற்றி எரிந்தத் தீயை அணைக்க உதவுவதற்காக அருகிலிருந்த சலவைக் கூடத்தில் உள்ள தீயணைக்கும் கருவியைப் பெறுவதற்காக சென்றதாகக் கூறப்படுகிறது.

அதற்குள் டானின் உடல் முழுவதும் தீ பரவியது.அவர் வலியால் அலறித் துடித்தார்.அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்தைப் பார்த்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜரான முதியவர் ஒரு வாரக் காவலில் வைக்கப்பட்டார்.சம்பவம் குறித்த தீவிர விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் தண்டனை குறித்து தீர்ப்பளிக்கப்படும்.