சிங்கப்பூரின் மருந்தகங்களில் பெனடால் காப்&கோல்டு,டிகொல்ஜன் போன்ற மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளது.காய்ச்சல்,இருமல்,மூக்கடைப்பு,தும்மல் போன்றவற்றுக்கு பரிந்துரைக்கப்படும் இந்த மருந்துகள் தற்போது மருந்தகங்களில் போதிய அளவுக்கு இல்லை என்று கூறப்படுகிறது.
உருமாற்றம் அடைந்த ஓமிக்ரோன் திரிபுகள் தீவிரமாகப் பரவி அனைவரையும் பாதிக்கிறது.தொற்றால் பாதிப்பவர்களுக்கு இருமல்,தலைவலி போன்றவை ஏற்படுகின்றன.இவற்றிலிருந்து விடுபட அத்தகைய மாத்திரைகளை அதிகம் உட்கொள்கின்றனர்.