தற்போதைய கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் தாராளமான அணுகுமுறையை மேற்கொள்ள முடியாது என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ குங் தெரிவித்துள்ளார்.
மேலும், கிருமியை முழுமையாக ஒழிக்கும் Zero-Covid திட்டத்திற்கும் செல்ல முடியாது என்றும் அவர் இன்று (ஜன. 10) நாடளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் ஆடவர் ஒருவரை தேடிவரும் போலீஸ்
எல்லா கட்டுப்பாடுகளையும் நீக்கவும் முடியாது, அதே போல நோய்த்தொற்றுகள் கட்டுப்பாடில்லாமல் அதிகரிக்கட்டும் என்றும் விட்டுவிடவும் முடியாது, என்றார்.
“Zero-Covid” முயற்சி மேற்கொண்டால், எல்லைகளை மூட வேண்டியிருக்கும், அதனால் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாவார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.