பழநி மலை முருகனுக்கு சிங்கப்பூர் இசை கலைஞர்கள் தங்களது இசையால் காணிக்கை செலுத்தினர்.
போகர் சன்னதி எதிரே புல்லாங்குகள் ஊதி சிறப்பித்து மகிழ்ந்தனர் சிங்கப்பூர் இசை கலைஞர்கள்.
சிங்கப்பூரில் உள்ள இசை கல்லூரி கலைஞர்கள் பழநி முருகனை தரிசிக்க வந்தனர், அப்போது இந்த இசை கச்சேரி அரங்கேறியதாக சொல்லப்பட்டுள்ளது.
ஒவ்வொருவராக புல்லாங்குகள் ஊதி முருகனுக்கு தனது இசையை காணிக்கையாக செலுத்தினர்.
இவர்கள் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு ஆண்டு தோறும் மார்கழி மாதம் வருவதுண்டு. இந்த ஆண்டு இவர்கள் பழநி முருகன் கோவிலுக்கு வருகை தந்தனர்.
இதனை அங்கு வருகை தந்த பக்தர்கள் ஆவலுடன் கண்டு களித்து மகிழ்ந்தனர்.
கட்டுமான தளத்தில் விபத்து… பலத்த சத்தம் – பதறிய ஊழியர்கள்: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி