இந்த மாத்திரைகளைத் திருடி என்ன செய்கிறார் இந்த முதியவர்? – கைவரிசையைக் காட்டியவருக்குச் சிறை!

Pic: File/Today

சிங்கப்பூரில் உள்ள பல்வேறு மருந்தகங்களில் இருந்து சுமார் ஓராண்டு காலமாக மாத்திரைகளைத் திருடி வந்த 77 வயது முதியவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இந்தாண்டு நவம்பர் வரை சிங்கப்பூர் முழுவதும் உள்ள பேரங்காடிகளில் உள்ள மருந்துக்கடைகளில் பெனாடல் மருந்துகளைத் திருடிய முதியவருக்கு இரண்டு ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

குறைந்தபட்சம் $1,723 மதிப்புள்ள மாத்திரைகளைத் திருடிய குற்றச்சாட்டை லிம் சூன் ஒப்புக்கொண்டார்.மேலும் 13 குற்றச்சாட்டுக்கள் தீர்ப்பின்போது கருத்தில் கொள்ளப்பட்டன.திருடிய மாத்திரைகளை அவரது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார்.

கடனை அடைப்பதற்காக மாத்திரைகளைத் திருடியதாகவும் நீதிமன்றத்தில் கூறினார்.Fair Price உட்பட பல்வேறு பேரங்காடிகளில் உள்ள மருந்தகங்களிலும் கைவரிசையைக் காட்டியுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் தேதி லிம் கைது செய்யப்பட்டார்.இதே போன்ற குற்றங்களை லிம் 1980 களிலும் செய்து தண்டனை பெற்றதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.