பாசிர் ரிஸ் பிளாட்டில் தீ: 40 பேர் வெளியேற்றம்

pasir-ris-hdb-flat-fire
SCDF Fcaebook

சிங்கப்பூர்: பிளாக் 571 பாசிர் ரிஸ் ஸ்ட்ரீட் 53 இல் 2வது HDB மாடி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

நேற்று மே 7 இரவு 9:15 மணிக்கு தீ விபத்து குறித்து புகார் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் அனைத்து Singapore Pools கிளைகளும் மூடல் – ஏன் தெரியுமா?

SCDF வீரர்கள் வருவதற்கு முன்னரே பாதிக்கப்பட்ட வீட்டில் இருந்து 5 பேர் வெளியேற்றப்பட்டனர்.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அண்டைப் வீடுகளில் இருந்த 35 பேர் போலீசார் மற்றும் SCDF வீரர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர்.

பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் சிறிய பாதிப்பு காரணமாக சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வெளிநாட்டு ஊழியர்களின் முதலாளிகள் செய்யும் வேலை… சொந்த நாட்டுக்கு ஊழியர்கள் செல்லும் நிலை – இனி மாறும் MOM நம்பிக்கை