கில்லி விஜய் சார் நீங்களா! – சிங்கப்பூரில் கில்லி படத்தின் பாணியில் செயல்பட்ட மிளகாய்த்தூள் குற்றவாளியின் நிலைமை என்ன?

pepper spray heroin narcotics cnb

சிங்கப்பூரின் பெடோக்கில் கடந்த ஜூலை 13-ஆம் தேதியன்று போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காக 30 வயது நபர் கைது என்று மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு (CNB) தெரிவித்துள்ளது.சுமார் S$ 47,000 மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக CNB கூறியது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் ஒரு வாரத்திற்கு 170 துஷ்பிரயோகம் செய்பவர்களின் போதைக்கு உணவளிக்கும் என்றும் CNB குறிப்பிட்டுள்ளது.சிங்கபூர் நபர் புதன்கிழமையன்று மாலை பெடோக் நார்த் அவென்யு 3-இல் கைது செய்யப்பட்டார்.அந்த நபரிடமிருந்து போதைப்பொருள் மற்றும் பல்வேறு போதைப்பொருள் வகைகள் கைப்பற்றப்பட்டதாக ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

CNB அதிகாரிகள் அந்த நபரை கைது செய்த போது,அவர்களை எதிர்த்து வன்முறையில் ஈடுபட்டு அதிகாரிகளை மிளகாய்த்தூள் கொண்டு தாக்கியுள்ளார்.இருப்பினும் அதிகாரிகள் அந்த நபரை அடக்குவதற்கு சிறப்பாக எதிர்கொண்டனர்.Knuckle duster,karambit knife,pepper spray போன்ற ஆயுதங்களும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டன.

அந்த நபரிடம் போதைப்பொருள் நடவடிக்கைகள் தொடர்பிலான விசாரணைகள் நடத்தப்படுகின்றன.15 கிராமுக்கு மேல் தூய ஹெராயின் கடத்தலை மேற்கொண்ட குற்றவாளியாக கண்டறியப்பட்டால் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்படலாம்.