பான் தீவு அதிவிரைவுச்சாலையில் (PIE) ஏற்பட்ட விபத்தில் 33 வயதுடைய ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
ஜூன் 23 ஆம் தேதி அன்று ஆடவர் ஓட்டிச் சென்ற கார் விபத்தில் சிக்கியதில் அவர் மரணித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கட்டுமான தளத்தில் விபத்து: கம்பியின் பகுதி, தொங்குமேடை இடிந்து விழுந்தது.. ஊழியருக்கு காயம்
கட்டுப்பாட்டை இழந்த வாகனம், புக்கிட் திமா வெளியேறும் பகுதிக்கு அருகே உள்ள தடுப்புச்சுவர் மற்றும் மற்றொரு காரின் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து கார் பலமுறை உருண்டதில் அவர் தூக்கி எறியப்பட்டார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த விபத்து நேற்று (ஜூன் 23) இரவு 9 மணியளவில் ஏற்பட்டதாக ஷின் மின் டெய்லி நியூஸ் கூறியுள்ளது.
மற்றொரு காரில் இருந்த 33 வயது ஓட்டுனரும், அவருடன் இருந்த 23 வயதுடைய பெண்ணும் டான் டோக் செங் மருத்துவமனைக்கு சுயநினைவுடன் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் சுமார் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்
கட்டுமான தளத்தில் விபத்து: கம்பியின் பகுதி, தொங்குமேடை இடிந்து விழுந்தது.. ஊழியருக்கு காயம்